பாகுபலி படப்பிடிப்பு நடந்த இடம் சுற்றுலா தலமானது

ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படத்தின் படப்பிடிப்பு நடந்த இடம், சுற்றுலா தலமானது.

ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பாகுபலி'. இப்படம் 2 பாகங்களாக வெளியாகி, உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இரண்டு பாகங்களின் படப்பிடிப்புமே, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதற்காக பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டன. படம் வெளியான பிறகு, கிடைத்த வரவேற்பால் அரங்குகள் எதுவுமே இடிக்கப்படவில்லை.

'மஹிஸ்மதி' என்று பெயரிடப்பட்டுள்ள அரங்குகள் நிறைந்த இடத்தை தற்போது சுற்றுலா தலமாக ஆக்கியிருக்கிறார்கள். அந்த இடத்துக்கு இன்று (செப்டம்பர் 9) பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.

இந்நிகழ்வும் ஒரு சாதனையாகவே கருதப்படுகிறது. ஒரு படத்தின் படப்பிடிப்பு நடத்த இடம், சுற்றுலா தலமாக பார்க்க அனுமதிக்கப்படுவது தென்னிந்தியாவில் இதுவே முதன் முறையாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

22 mins ago

சினிமா

57 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்