தெலுங்கு சினிமாவில் வில்லனாக நடிகர் ஜோஜு ஜார்ஜ் அறிமுகம் 

By செய்திப்பிரிவு

மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் வில்லன் கதாபாத்திரத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள திரையுலகின் முதன்மை நடிகராக வலம் வரும் ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் அண்மையில் ஓடிடியில் வெளியான ‘இரட்ட’ திரைப்படம் ரசிகர்களிடையே பாராட்டை பெற்றது. இதில் ஜோஜு ஜார்ஜின் நடிப்பின் பலராலும் சிலாகிக்கப்பட்டது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகரான ஜோஜு ஜார்ஜ் கடந்த 2021-ம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து ‘புத்தம் புது காலை விடியாதா’ என்ற ஆந்தாலஜி படத்திலும், ‘பபூன்’ படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில், அவர் தற்போது தெலுங்கு சினிமாவில் வில்லனாக அறிமுகமாகிறார். பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நாயகனாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் ரெட்டி இயக்குகிறார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஜோஜு ஜார்ஜ். படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE