சிரஞ்சீவி படத்துக்காக பொள்ளாச்சியில் பிரம்மாண்ட அரங்குகள்

சிரஞ்சீவி நடிக்கவுள்ள 'சை ரா - நரசிம்ஹா ரெட்டி' படத்துக்காக பொள்ளாச்சியில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

'சை ரா - நரசிம்ஹா ரெட்டி' படத்தின் படப்பிடிப்புக்காக, கலை இயக்குநர் ராஜீவன் மேற்பார்வையில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணிகள் பொள்ளாச்சியில் தொடங்கப்பட்டுள்ளன. பொள்ளாச்சி, ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தானில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் சுமார் 150 கோடி பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக இதனை தயாரிக்கவுள்ளார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த நரசிம்ஹா ரெட்டி என்பவரின் வாழ்க்கை வரலாறை முதல்முறையாக திரைக்கு கொண்டு வரும் படம் 'சை ரா - நரசிம்ஹா ரெட்டி'.

இதில் சிரஞ்சீவியோடு, அமிதாப் பச்சன், கிச்சா சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, ஜெகபதிபாபு உள்ளிட்டோரும் படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது படக்குழு. மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை, ரவிவர்மன் ஒளிப்பதிவு, ராஜீவன் கலை என மிகப் பிரம்மாண்டமாக இத்திரைப்படம் உருவாகிறது. சுரேந்தர் ரெட்டி இப்படத்தை இயக்குகிறார்.

'அதனொக்கடே', 'கிக்', 'ரேஸ் குர்ரம்' உள்ளிட்ட வெற்றிப் படங்களின் இயக்குநர் சுரேந்தர் ரெட்டி. மேலும், ராம்சரண் நடித்த த்ருவா (தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்) படத்தையும் இவர் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

2 days ago

மேலும்