இயக்குநர் முருகதாஸ் கதை - தயாரிப்பில் புதிய படம்

இயக்குநர் முருகதாஸ், தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவுடன் இணைந்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் புதிய பட ஒன்றை தயாரிக்கவுள்ளார்.

சோனாக்‌ஷி சின்ஹா பிரதான பாத்திரத்தில் நடிக்கும் 'அகிரா' படத்தின் இறுதிகட்ட வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கும் இயக்குநர் முருகதாஸ், அடுத்ததாக தயாரிப்பாளர் தில் ராஜுவுடன் இணைந்து கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் புதிய படத்தை தயாரிக்கவுள்ளார். இந்தப் படம் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகவுள்ளது.

கோபிசந்த், சமீபத்தில் 'பண்டக சேஸ்கோ' என்ற ஹிட் படத்தைக் கொடுத்தவர். புதிய படத்தில் நடிக்க முன்னணி தெலுங்கு நடிகர் ஒருவரை அணுகியுள்ளனர். இந்தப் படத்தின் கதையை முருகதாஸ் எழுதி, தமிழ் பதிப்பை தயாரிக்கவுள்ளார். தெலுங்கு பதிப்பை தில் ராஜு தயாரிக்கிறார்.

முன்னதாக, இது 'கத்தி' படத்தின் தெலுங்கு ரீமேக்காக இருக்கும் என்று வந்த செய்திகளை படக்குழு மறுத்துவிட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE