ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உளவுத்துறை அதிகாரியாக மகேஷ்பாபு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் மகேஷ்பாபு.

'அகிரா' இந்தி படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

ராகுல் ப்ரீத் சிங், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஓளிப்பதிவு செய்து வருகிறார்.

இப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் மகேஷ்பாபு. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகள் படப்பிடிப்பு நடத்திவருகிறார்கள். முதல் முறையாக இப்படத்துக்கு தமிழிலும் டப்பிங் பேசவிருக்கிறார் மகேஷ்பாபு.

சென்னை படப்பிடிப்பை முடித்து, மும்பையில் சில முக்கிய காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE