ஏ.ஆர்.முருகதாஸ் பட நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம்

ஏ.ஆர்.முருகதாஸ் - மகேஷ்பாபு படத்தின் நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தமாகி உள்ளார்.

சோனாக்‌ஷி சின்ஹா, இயக்குநர் அனுராக் கஷ்யாப், லட்சுமி ராய் உள்ளிட்ட பலர் நடிப்பில் 'அகிரா' என்ற இந்திப் படத்தை இயக்கி இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். தமிழில் வெளிவந்த 'மெளனகுரு' படத்தின் ரீமேக் தான் 'அகிரா' என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இப்படத்தின் பணிகள் முடித்தவுடன், மகேஷ்பாபு நாயகனாக நடிக்கும் படத்தின் முதற்கட்ட பணிகளை கவனித்துவந்தார். இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்.

இப்படத்தின் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன், வில்லனாக எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். முதலில் இப்படத்தின் நாயகியாக ப்ரணீதா சோப்ரா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.

தற்போது ப்ரணீதா சோப்ராவுக்கு பதிலாக ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தமாகி உள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் படம் என்பதால் கதையே கேட்காமல் ஒப்பந்தமாகி இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE