கேள்வி கேட்கும் பெண்களை ஒதுக்கும் கேரள சினிமா... புரட்சி பேசும் நாயகர்கள் எங்கே?

‘நானும்’ இயக்கம் ஒரு பெரும் அலையாக இப்போது பேசப்பட்டுவருகிறது. ஆனால், இதற்கு ஓராண்டுக்கு முன்பே கேரள சினிமா துறையைச் சேர்ந்த பெண்கள், ‘டபுள்யூசிசி’ எனும் சினிமாவில் பணிபுரியும் பெண்களுக்கான அமைப்பை உருவாக்கினார்கள். தங்களுடைய பிரச்சினைகளை நியாயமான முறையில் பேசத் தொடங்கியவர்களில் பலரை இந்த ஓராண்டில் கட்டம் கட்டி ஒதுக்கியிருக்கிறது கேரள சினியுலகம். “கேள்வி கேட்கிறேன் என்பதற்காகவே நான்கு ஆண்டுகளாக எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன” என்கிற ரம்யா நம்பீசன் ஓர் உதாரணம். திரையில் புரட்சி பேசும் நாயகர்கள் தங்கள் சொந்தத் துறையில் நடக்கும் இந்த அக்கிரமத்துக்குத் துணைபோவது ஏன்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE