நடன கலைஞர் பாலியல் புகார்: ஜானி மாஸ்டர் மீது வழக்குப் பதிவு

By செய்திப்பிரிவு

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குநர், ஜானி மாஸ்டர். தனுஷின் ‘மாரி 2’ படத்தில் ‘ரவுடி பேபி’, ‘பட்டாஸ்’ படத்தின் ‘ஜில் ப்ரோ’, ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ‘மேகம் கருக்காதா’, விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் ‘ஹலமிதி ஹபி போ’, ‘ஜெயிலர்’ படத்தில் ‘காவாலா’ உட்பட பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். ‘மேகம் கருக்காதா’ பாடலுக்காக அவருக்குச் சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

அவர் மீது, அவர் குழுவில் பணிபுரியும் 21 வயது பெண் நடனக் கலைஞர், ஹைதராபாத் ராய்துர்கம் போலீஸில் பாலியல் புகார் அளித்துள்ளார். அதில், படப்பிடிப்புக்காக சென்னை, மும்பை என சென்ற இடங்களிலும் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் வைத்தும் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE