பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தின் படப்பணிகள் தொடக்கம் 

By செய்திப்பிரிவு

சென்னை: பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தின் படப்பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன.

‘கேஜிஎஃப்’ சீரிஸ்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பிரசாந்த் நீல். ‘சலார்’ படத்தைத் தொடர்ந்து அவர் அடுத்ததாக ஜுனியர் என்டிஆர் உடன் புதிய படத்துக்காக இணைகிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்துக்கு ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார்.

சங்கராந்தியை முன்னிட்டு இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஜனவரி 9, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் பூஜை ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதன் மூலம் படப்பணிகள் தொடங்கியுள்ளன. ஜுனியர் என்டிஆரை பொறுத்தவரை அவர் நடிப்பில் ‘தேவரா’ திரைப்படம் செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE