ஃபசில் ஜோசஃப் - நஸ்ரியாவின் மலையாள திரைப்பட ஷூட்டிங் நிறைவு

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: பசில் ஜோசஃப், நஸ்ரியா இணைந்து நடிக்கும் ‘சூக்‌ஷமதர்ஷினி’ (Sookshmadarshini) படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படம் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வந்த நடிகை நஸ்ரியா, நானி நடிப்பில் வெளியான ‘அன்டே சுந்தராணிகி’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இந்தப் படம் 2022-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்துக்குப் பிறகு 2 ஆண்டுகளாக நஸ்ரியா நடிக்கும் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. அவரின் கம்பேக்குக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அவர் பசில் ஜோசஃப்புடன் இணைந்து புதிய மலையாளப் படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படத்துக்கு ‘சூக்‌ஷமதர்ஷினி’ (Sookshmadarshini) என தலைப்பிடப்பட்டுள்ளது.

எம்.சி.ஜித்தின் இயக்கும் இப்படத்தை சமீர் தாஹிர், ஷைஜு காலித் இணைந்து தயாரிக்கின்றனர். கிறிஸ்டோ சேவியர் படத்துக்கு இசையமைக்கிறார். தீபக் பரம்போல், சித்தார்த் பரதன், மெரின் பிலிப், அகில பார்கவன், பூஜா மோகன்ராஜ், கோட்டயம் ரமேஷ், கோபன் மங்காட் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் படம் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE