வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 330-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரணப் பணிகளுக்காக, கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு பிரபலங்கள் நன்கொடை அளித்து வருகின்றனர்.
விக்ரம் ரூ.20 லட்சம் வழங்கிய நிலையில் ராஷ்மிகா மந்தனா ரூ.10 லட்சம் வழங்கினார். சூர்யா, கார்த்தி, ஜோதிகா மூவரும் ரூ.50 லட்சம் வழங்கினர். நயன்தாரா- விக்னேஷ் சிவன் இணைந்து ரூ.20 லட்சமும் மோகன்லால் ரூ.25 லட்சம், மம்மூட்டி ரூ.20 லட்சம், துல்கர் சல்மான் ரூ.15 லட்சம் என நிவாரண நிதி வழங்கியுள்ளனர்.