போதை விருந்து விவகாரம்: போலீஸில் ஆஜராக அவகாசம் கேட்டார் ஹேமா

By செய்திப்பிரிவு

பெங்களூரு: பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி அருகே பண்ணை வீடு ஒன்றில் கடந்த 19-ம் தேதி மதுவிருந்து நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின்படி குற்றப்பிரிவு போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கொகைன், கஞ்சா உள்ளிட்ட போதைபொருட்கள் சிக்கின. போதை விருந்துக்கு ஏற்பாடு செய்த ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் வாசு உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தெலுங்கு நடிகைகள் ஹேமா, ஆஷா ராய் உட்பட முக்கிய பிரமுகர்கள் இந்த விருந்தில் பங்கேற்றுள்ளனர். அதில் நடிகை ஹேமா உட்பட 8 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் போதைப் பொருள் உட்கொண்டது உறுதியானது. இதையடுத்து விசாரணைக்கு 27-ம் தேதி (நேற்று) ஆஜராகுமாறு ஹேமா உட்பட 5 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், நடிகை ஹேமா, தனது உடல்நிலையை காரணம் காட்டி, 7 நாள் அவகாசம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

தெலுங்கில் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஹேமா தமிழில், அழகிய தமிழ் மகன், சத்யம், தேவி என சில படங்களில் நடித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்