65-வது தேசிய திரைப்பட விருதுகள்: ‘பாகுபலி 2’ படத்துக்கு மூன்று தேசிய விருதுகள்

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி 2’ படத்துக்கு மூன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

65-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. அதில், எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி 2’ படத்துக்கு மூன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்த வெகுஜனப்படம், சிறந்த சண்டைப் பயிற்சி இயக்குநர், சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் என மூன்று விருதுகள் இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளன.

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், ரோகிணி, நாசர் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்தப் படம், தற்போது கூட 100 நாட்களைக் கடந்து ஜப்பானில் திரையிடப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE