பிரித்விராஜின் ‘ஆடு ஜீவிதம்’ ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ்!

By செய்திப்பிரிவு

சென்னை: பிரித்விராஜ் நடித்துள்ள மலையாள படமான ‘ஆடு ஜீவிதம்’ ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள சினிமாவின் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான படம் ‘ஆடு ஜீவிதம்’. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ‘ஆடு ஜீவிதம்’ நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. படத்தை ப்ளஸ்ஸி இயக்க, பிருத்விராஜ், அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சுனில் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகும் இப்படத்தின் ஒலிக் கலவையை ரசூல் பூக்குட்டி கவனிக்கிறார்.

வீட்டுக் கடனை அடைக்கவும், சிறிய அறை கட்டுவதற்கும் அரேபிய தேசத்திற்கு புலம்பெயரும் மலையாளி ஒருவர் அங்கு சென்று ஆடு மேய்ப்பவராக மாறுவதையும் அதைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதுதான்

An inspiring journey of a man who just wouldn't give up!#TheGoatLife releasing on 10.04.2024!@DirectorBlessy @benyamin_bh @arrahman @Amala_ams @Haitianhero @rikaby @resulp @iamkrgokul @Moes_Art @HombaleFilms @AAFilmsIndia @PrithvirajProd @RedGiantMovies_ @MythriOfficialpic.twitter.com/ydMqtIxVsW

— Prithviraj Sukumaran (@PrithviOfficial) January 30, 2024 " target="_blank"> ‘ஆடு ஜீவிதம்’ நாவலின் கதை. இதை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,இப்படம் வரும் வரும் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE