திறமைக்கு திருமணம் தடையில்லை: பாவனா

By செய்திப்பிரிவு

கொச்சி: தமிழில், சித்திரம் பேசுதடி படம் மூலம் அறிமுகமானவர், மலையாள நடிகை பாவனா. தொடர்ந்து, வெயில், தீபாவளி, ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான் என பல படங்களில் நடித்து வந்தார். இவர் கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

அவர் அளித்துள்ள பேட்டியில் திறமைக்கு திருமணம் தடையில்லை என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “நான் 15 வயதில் நடிக்கத் தொடங்கினேன். அப்போது திருமணத்துக்குப் பிறகு நடிகைகள் நடிப்பதை நிறுத்திவிடுவார்கள் என்று கேள்விபடுவேன். இயக்குநர்களும் திருமணமான நடிகைகளுக்கு கதாநாயகி வாய்ப்பு கொடுக்கமாட்டார்கள். ஆனால், இதில் இருந்து வேறுபட்டு திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று அப்போதே நினைத்தேன். திருமணத்தால் உங்கள் திறமை போய்விடாது. அதனால் ஏன் நடிப்பை விட வேண்டும்? என் கணவரை சந்தித்தபோதும் அவரும் இதே மனநிலையை கொண்டிருந்தார்” என்று தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE