ராஜமவுலி படத்தில் இந்தோனேஷிய நடிகை!

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: இயக்குநர் ராஜமவுலி, ‘ஆர்.ஆர்.ஆர்’, படத்தை அடுத்து மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கும்படத்தை இயக்குகிறார். இந்தப் படம் ‘இண்டியானா ஜோன்ஸ்' பாணியில் ஆக்ஷன், அட்வென்சர் ஜானரில் இருக்கும் என்றும் கதைஉலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் ராஜமவுலி ஏற்கெனவே கூறியிருந்தார். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாகும் என்றும் ரூ.1000 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இதில் மகேஷ்பாபு ஜோடியாக இந்தோனேஷிய நடிகை செல்சீ இஸ்லன்நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் அவருக்கு டெஸ்ட்ஷூட் நடத்தப்பட்டதாகவும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும்தெரிகிறது. அவரோடு தீபிகாபடுகோனும் முக்கிய வேடத்தில்நடிக்க இருக்கிறார் என்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE