இயக்குநர் சேரன், கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். சுதீப்பின் 47-வது திரைப்படமான இதை, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. கன்னடத்தில் உருவாக இருக்கும் இந்தப் படம் தமிழிலும் வெளியாகும் என்று தெரிகிறது. இந்தப் படத்தில் ‘கேஜிஎஃப்’ ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். இதைப் படக்குழு அறிவித்துள்ளது. ஸ்ரீநிதி ஷெட்டி, ‘கே.ஜி.எஃப்’ படங்களை அடுத்து தமிழில் விக்ரமின் ‘கோப்ரா’ படத்தில் நடித்திருந்தார். இப்போது இதில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இயக்குநர் சேரன் இதற்கு முன் இயக்கி நடித்த ‘திருமணம்’என்ற படம் 2019-ம் ஆண்டு வெளியானது. இதையடுத்து சுதீப் நடிக்கும் படத்தை அவர் இயக்குகிறார். நடிகர் சுதீப், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் தமிழ், கன்னடத்தில் உருவாகும் படத்தில் நடித்துவருகிறார். இதை விஜய் கார்த்திகேயா இயக்குகிறார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
விளையாட்டு
5 mins ago
இந்தியா
24 mins ago
இந்தியா
30 mins ago
தமிழகம்
56 mins ago
இந்தியா
37 mins ago
இந்தியா
44 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இணைப்பிதழ்கள்
1 hour ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago