மலையாள நடிகர் குந்தாரா ஜானி காலமானார்

By செய்திப்பிரிவு

கொச்சி: மலையாளத்தில் பிரபல நடிகராக அறியப்படும் குந்தாரா ஜானி மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 71.

1979-ம் ஆண்டு ‘நித்ய வசந்தம்’என்ற படம் மூலம் அறிமுகமான குந்தரா ஜானி, சுமார் 500 திரைப்படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்து வந்தார். தமிழில் அஜித்தின் கிரீடம், வாழ்க்கை சக்கரம், நடிகன் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

கொல்லத்தில் வசித்து வந்த இவருக்கு, செவ்வாய்க்கிழமை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் மறைவுக்கு மலையாளத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE