தெலுங்கில் மெர்சல் வெளியானது: ஜிஎஸ்டி வசனங்களுக்கு மியூட்

By ஸ்கிரீனன்

தெலுங்கில் விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் 'அதிரந்தி' என்ற பெயரில் வெளியானது. அங்கு ஜிஎஸ்டி வசனங்களுக்கு மியூட் செய்யப்பட்டு இருக்கிறது.

'மெர்சல்' தெலுங்கு பதிப்பான 'அதிரந்தி' திட்டமிட்டபடி தீபாவளியன்று வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளருக்கு சிக்கல் ஏற்பட்டது. தணிக்கையில் பல்வேறு சிக்கல்களை கடந்து, நவம்பர் 9-ம் தேதி வெளியாகியுள்ளது.

தமிழில் விஜய் பேசிய ஜிஎஸ்டி வசனங்கள் மற்றும் வடிவேலு பேசிய டிஜிட்டல் இந்த்யா வசனங்களால் பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த வசனங்கள் அனைத்துமே மியூட் செய்யப்பட்டு இருக்கிறது.

தமிழில் ’மெர்சல்’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருந்தது. உலகமெங்கும் சுமார் 150 கோடியைத் தாண்டி வசூல் செய்திருப்பதாக வியாபார நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE