‘கிங் ஆஃப் கோதா’ கிளைமாக்ஸ் ரீ ஷூட் செய்தது உண்மைதான்: உறுதி செய்தார் துல்கர் சல்மான்

By செய்திப்பிரிவு

கொச்சி: துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘கிங் ஆஃப் கோதா’. இதில் ஐஸ்வர்யா லட்சுமி, ஷபீர், செம்பன் வினோத், சாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்திரன் உட்படப் பலர் நடித்துள்ளனர். அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு நிமீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தைத் துல்கர் சல்மானின் வேஃபர் பிலிம்ஸும் ஜீ ஸ்டூடியோஸும் இணைந்து தயாரித்துள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் காரைக்குடி பகுதியில் நடைபெற்றது.

1980-களில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி திருப்தியாக இல்லை என்பதால் ரீ ஷூட் செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் இதை நடிகர் துல்கர் சல்மான் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “ரீ ஷூட் நடந்தது உண்மைதான். அது கிளைமாக்ஸில் சிக்கல் என்பதால் அல்ல. கதையின் ஓட்டத்தோடு பார்க்கும்போது இன்னும் பிரம்மாண்டமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக” என்றார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE