முன்னாள் மனைவி ஆம்பர் ஹேர்ட்டின் இழப்பீடு தொகையை அறக்கட்டளைகளுக்கு வழங்க ஜானி டெப் முடிவு

By செய்திப்பிரிவு

ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் தனக்கு எதிரான அவதூறு வழக்கில் மனைவி ஆம்பர் ஹேர்ட்டிடம் பெற்ற 1 மில்லியன் டாலர் பணத்தை 5 அறக்கட்டளைகளுக்கு தானமாக வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹேர்ட் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில்தான் உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறி ஜானி டெப்பின் மீது குற்றம்சாட்டியிருந்ததோடு, அவதூறு வழக்கு ஒன்றையும் தொடர்ந்திருந்தார். தனது பெயருக்கு கலங்கம் விளைவுக்கும் வகையில் ஆம்பர் இந்த வழக்கை தொடர்ந்திருப்பதாக கூறி ஜானி டெப் பதில் மனு தாக்கல் செய்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணையில் ஆம்பர் ஹேர்ட் தொடர்ந்த வழக்குகள் ஆதராமற்றவை என கூறி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அவதூறு பரப்பியதற்காக ஆம்பர் அவரது முன்னாள் கணவர் ஜானி டெப்புக்கு இழப்பீடாக 10 மில்லியன் டாலரும், அபராதமாக 5 மில்லியன் டாலரும் வழங்க வேண்டும் என நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டிருந்தது. இறுதியில் ஜானி டெப்புக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலரை இழப்பீடாக கொடுத்து மொத்த வழக்கையும் முடித்துகொள்வதாக மனைவி ஆம்பர் ஹேர்ட் அறிவித்தார்.

இந்நிலையில், ஆம்பர் ஹெர்ட் வழங்கவுள்ள ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை நடிகர் ஜானி டெப், 'மேக் ஏ பிலிம் பவுண்டேஷன்', 'தி பெயின்டட் டர்ட்டில்', 'ரெட் பெதர்', 'டெடியரோ சோசைட்டி' மற்றும் 'அமசோனியா பண்ட் அலயன்ஸ்' ஆகிய ஐந்து தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE