ப்ரியதர்ஷன் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக அக்ஷய் குமார் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மோகன்லால் நடித்துள்ள 'மரைக்காயர்' படத்தைத் தொடர்ந்து, இந்தியில் 'ஹங்கமா 2' படத்தை இயக்கியுள்ளார் ப்ரியதர்ஷன். இந்தப் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
ஆகஸ்ட் 12-ம் தேதி 'மரைக்காயர்' படம் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்காகத் தயாராகி வந்தார் ப்ரியதர்ஷன். தற்போது அந்தக் கதையில் அக்ஷய் குமார் நடிப்பது உறுதியாகியுள்ளது. 'ரக்ஷா பந்தன்' படப்பிடிப்புத் தளத்தில் அக்ஷய் குமார் - ப்ரியதர்ஷன் சந்திப்பு நடைபெற்றது.
'ஹீரா ஃபெர்ரி', 'கரம் மசாலா', 'பூல் ஃபூலையா', 'பாஹம் பாக்', 'தி தனா தான்' மற்றும் 'கட்டா மிட்டா' ஆகிய படங்களில் அக்ஷய் குமார் - ப்ரியதர்ஷன் கூட்டணி இணைந்து பணிபுரிந்துள்ளது. அவற்றைத் தொடர்ந்து இந்தப் புதிய படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.
இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குள் தான் ஒப்புக் கொண்டுள்ள படங்களை முடித்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளார் அக்ஷய் குமார்.