ஜல்லிக்கட்டு போராட்டம் பிரமாண்டமாக உள்ளது: அனுராக் காஷ்யப்

ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்று வரும் போராட்டம் மிகப் பிரமாண்டமாக உள்ளதாக அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் பலரும் ஒன்றிணைந்து இப்போராட்டம் மிகப்பெரிய போராட்டமாக உருமாறியுள்ளது.

இப்போராட்டம் குறித்து இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநர் அனுராக் காஷ்யப், "ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் பிரமாண்டமாக இருக்கிறது. இப்படி ஒரு பிரமாண்டத்தைப் பார்த்ததில்லை. முழுவதும் மக்களின் முயற்சி.

படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. எதனால் இப்போராட்டம் நடைபெறுகிறது என விரிவாக தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE