ஆமிர்கான் நடிப்பில் வெளியான 'தங்கல்' திரைப்படம் உலகளவில் ரூ.700 கோடி வசூலை கடந்துள்ளது.
நித்தேஷ் திவாரி இயக்கத்தில் ஆமிர்கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'தங்கல்'. கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு வெளியான இப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் வெளியான 3 நாட்களில் சுமார் ரூ.100 கோடியைத் தாண்டி படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அமெரிக்கா, கனடா உள்ளிட்ட உலக நாடுகளிலும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. வசூலில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வந்தது 'தங்கல்'. தற்போது அதிக வசூல் செய்த இந்திப் படங்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது 'தங்கல்'. சுமார் ரூ.350 கோடி வசூலைக் கடந்துள்ளது.
இந்நிலையில் அடுத்த சாதனையாக உலகளவில் சுமார் ரூ.700 கோடி வசூலைக் கடந்துள்ளது 'தங்கல்'. இப்பட்டியலிலும் ஆமிர்கான் நடிப்பில் வெளியான 'பி.கே' ரூ.792 கோடி வசூல் செய்து முதல் இடத்தில் உள்ளது.
தற்போது 'தங்கல்' திரைப்படம் ரூ.715 கோடி வசூலைக் கடந்துள்ளது. மேலும், இப்படம் ரூ.800 கோடி வசூலைக் கடக்கும் என்று இந்தி திரையுலக விமர்சகர்கள் கணித்துள்ளார்கள்.