ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்காக 33,000 அடி உயரத்தில் ஆக்‌ஷன் காட்சி

By செய்திப்பிரிவு

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இப்போது இயக்கி வருகிறார். இதில் ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். வித்யுத் ஜம்வால் வில்லனாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை அடுத்து சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ என்ற படத்தை இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சில வாரங்களுக்கு முன் வெளியானது. சஜித் நாடியத்வாலா தயாரிக்கும் இதில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் 18-ம் தேதி பிரம்மாண்ட ஆக்‌ஷன் காட்சியுடன் மும்பையில் தொடங்குகிறது. கடல் மட்டத்தில் இருந்து 33 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் மிரட்டலான ஆக்‌ஷன் காட்சியை படமாக்க உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE