மும்பை: இந்தி நடிகை மிருணாள் தாக்குர், ‘சீதாராமம்’ படம் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட தென்னிந்திய மொழிகளிலும் பிரபலமானார். தெலுங்கில் நானியுடன் நடித்த ‘ஹாய்நானா’ வரவேற்பைப் பெற்றது. இப்போது, விஜய் தேவரகொண்டாவுடன் 'ஃபேமிலிஸ்டார்' என்ற பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையான இவர், விளம்பர படங்களிலும் நடித்துவருகிறார்.
இந்நிலையில், மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் அடுத்தடுத்த இரண்டு வீடுகளை அவர் வாங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ.10 கோடி என்று கூறப்படுகிறது. நடிகை கங்கனா ரனாவத்தின் தந்தை மற்றும் சகோதரருக்கு சொந்தமான இந்த வீடுகளை, மிருணாளும் அவர் தந்தையும் வாங்கியுள்ளனர்.