சுல்தான்பூர்: இந்தி நடிகையும், பின்னணி பாடகியுமான மல்லிகா ராஜ்புத் என்ற விஜயலட்சுமி (35) தற்கொலை செய்துகொண்டார். உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த அவர், சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். அவரது பெற்றோர் அளித்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அவர் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த போது,மின்விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டதாக மல்லிகாவின் தாய் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். போலீஸார் விசாரித்து வருகின்றனர்