திருப்பதி: பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன். இவர் நடித்து வெளியான பதான், ஜவான் படங்கள் இந்தாண்டு வரவேற்பைப் பெற்றன. அடுத்து அவர் நடித்துள்ள ‘ஃபைட்டர்’ படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் நேற்றுமுன் தினம் மாலை வந்தார். மலை அடிவாரத்தில் இருந்து பாதயாத்திரையாகச்சென்ற அவர்கள், சுமார் 3.30 மணி நேரம் மலையேறி திருப்பதி மலையில் இரவு தங்கினர். பின்னர் நேற்று காலை சாமிதரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயிலில் உள்ளரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.