“50 நாள் படப்பிடிப்பு முடிந்ததும் வெறுமையை உணர்கிறேன்” - ‘அனிமல்’ குறித்து ராஷ்மிகா

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: “50 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஆனால், ஏதோ ஒரு பெரிய வெற்றிடத்தை உணர ஆரம்பித்திருக்கிறேன்” என ‘அனிமல்’ படத்தில் பணியாற்றியது குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா அடுத்து பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் கைகோத்துள்ளார். இருவரும் இணையும் படத்துக்கு ‘அனிமல்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். படம் பான் இந்தியா முறையில் ஆகஸ்ட் மாதம் 11-ஆம் நாள் திரைக்கு வர உள்ளது. ராஷ்மிகா மந்தனாவுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் தனது படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘‘நேற்று இரவு ‘அனிமல்’ பட ஷூட்டிங் முடித்து விட்டு ஹைதராபாத் திரும்பவிட்டேன். ‘புஷ்பா 2’ படத்தின் படப்பிடிப்பை தொடங்கிவிட்டேன். ‘அனிமல்’ படத்தில் நடித்தது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது என்பதை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். படத்தில் என்னை நடிக்க அழைத்தபோது ஆச்சரியமாக இருந்தது. இந்தக் குழுவுடன் பணியாற்றவேண்டும் என்பது நான் விரும்பிய ஒன்று. 50 நாட்கள் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஆனால், ஏதோ ஒரு பெரிய வெற்றிடத்தை உணர ஆரம்பித்திருக்கிறேன்.

இந்தப் படக்குழுவுடன் பணியாற்றியதை எப்போதும் மறக்க முடியாது. மொத்த படக்குழுவினரும் என் மனதுக்கு நெருக்கமானவர்களாக அமைந்தனர். செட்டில் வேலை செய்த ஒவ்வொருவரும் தேர்ந்த கலைஞர்கள். அதுமட்டுமல்லாமல் நல்ல மனிதர்கள். இன்னும் 1000 முறை அவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும், அப்படி வேலை செய்யும்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருப்பேன் என்றும் அவர்களிடமே தெரிவித்தேன். ரன்பீர் கபூருடன் பணியாற்றுப்போகிறேன் என நினைத்த போது பதற்றமாக இருந்தேன். அவர் ஒரு நல்ல மனிதர். இந்த படப்பிடிப்பை என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக மாற்றிய படக்குழுவுக்கு நன்றிகள்” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE