விபத்தில் சிக்கியது புஷ்பா 2 படக்குழு

By செய்திப்பிரிவு

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடித்து வெற்றிபெற்ற படம், ‘புஷ்பா’. சுகுமார் இயக்கிய இந்தப் படத்தின் அடுத்த பாகம் ‘புஷ்பா 2’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் நடந்து வந்தது. படப்பிடிப்பு நேற்று முன்தினம் முடிவடைந்ததை அடுத்து, அதில் நடித்த துணை நடிகர்கள், பேருந்து ஒன்றில் ஹைதராபாத் திரும்பினர். விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் நார்க்கட்பள்ளி என்ற இடத்துக்கு நேற்று காலை வந்தபோது, சாலையோரத்தில் நின்ற அரசு பேருந்து மீது மோதியது. இதில் 2 நடிகர்கள் காயமடைந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE