அரைகுறை ஆடையுடன் கோயிலுக்கு வருவதா? - கங்கனா விளாசல்

By செய்திப்பிரிவு

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பைஜ்நாத் சிவன் கோயிலுக்கு, மேற்கத்திய உடை அணிந்து சில பெண்கள் சென்றுள்ளனர். அந்தப் புகைப்படத்தை நிகி உனியள் என்பவர் ட்விட்டரில் பதிந்து, ‘நைட் கிளப்புக்கு செல்பவர்கள் போல உடையணிந்து கோயிலுக்கு வந்துள்ளனர். இதுபோன்று வருபவர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது’ என்று கூறி கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதை டேக் செய்துள்ள நடிகை கங்கனா ரனாவத் கூறியிருப்பதாவது: இந்த மேற்கத்திய ஆடைகள், வெள்ளையர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டவை. ஒரு முறை வாடிகனுக்கு ஷார்ட்ஸ், டி-சர்ட் அணிந்து சென்றேன். அந்த வளாகத்துக்குள் கூட என்னை அனுமதிக்கவில்லை. பிறகு ஓட்டலுக்கு மீண்டும் சென்று உடை மாற்றி வந்தேன். இரவு உடைகளைச் சாதாரணமாக அணியும் இவர்கள், சோம்பேறிகள் தவிர வேறில்லை. இத்தகைய முட்டாள்களுக்கு கடுமையான விதிகள் வகுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE