ஜெயம் ரவியின் புதிய படத்தை கிருத்திகா உதயநிதி இயக்க வாய்ப்பு

By செய்திப்பிரிவு

ஜெயம் ரவியின் புதிய படத்தை இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்க உள்ளதாகவும், இப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் 28-ம் தேதி ஜெயம் ரவி நடிப்பில் ‘பொன்னியின் செல்வன் 2’ படம் வெளியானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் ‘இறைவன்’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜுடன் இணைந்து அவர் நடிக்கும் ‘சைரன்’ படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்த நிலையில், அடுத்ததாக, ‘வணக்கம் சென்னை’, ‘பேப்பர் ராக்கெட்’ மூலம் கவனம் ஈர்த்த கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி.

நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் எனக் கூறப்படுகிறது. மேலும் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE