சூர்யா நடித்த ‘சில்லுனு ஒரு காதல்’, ஆரி அர்ஜுனன் நடித்த ‘நெடுஞ்சாலை’, தெலுங்கில் ‘ஹிப்பி’, சிம்பு நடித்த ‘பத்து தல’ படங்களை இயக்கியவர், என்.கிருஷ்ணா. இவர் அடுத்து குளோபல் ஒன் ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்கு படம் இயக்க இருக்கிறார். இந்நிறுவனம் ‘ராமன் தேடிய சீதை’, ‘சாருலதா’, ‘அலோன்’ (இந்தி), 'ஹே சினாமிகா' ஆகிய படங்களைத் தயாரித்துள்ளது. என்.கிருஷ்ணா இயக்கும் படம், பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் உருவாக இருக்கிறது.
இந்நிலையில் இவர் இயக்கும் படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியானது. இதுபற்றிஇயக்குநர் கிருஷ்ணாவிடம் கேட்டபோது, மறுத்தார். “பான் இந்தியா படம் என்பதால் முன்னணி ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விஜய் தேவரகொண்டாவிடம் பேச்சு நடந்தவில்லை. எப்படி இந்தச் செய்தி வெளியானது என்று தெரியவில்லை. யார் நடிக்கிறார் என்பது முடிவானதும் தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கும்” என்றார்.