சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ உடன் மோதும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ - தீபாவளி ரிலீஸ் என அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படமும் அன்றைக்கு வெளியாவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014-ம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘ஜிகர்தண்டா’. சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜே இயக்கும் இப்படத்திற்கு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கார்த்தி சுப்பராஜின் ஸ்டோன் பென்ஞ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அப்டேட்டுக்காக தனி வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இது தவிர்த்து கார்த்தியின் ‘ஜப்பான்’ திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகலாம் என கூறப்படுகிறது. வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE