நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி

By செய்திப்பிரிவு

’ஒரு கல்லூரியின் கதை’, ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய நந்தா பெரியசாமி இயக்கும் புதிய படம் ஒன்றில் சமுத்திரக்கனி நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று தொடங்கியது.

சமுத்திரக்கனியுடன் இப்படத்தில் அனன்யா, பாரதிராஜா, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். த்ரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மேகமலை, குமுளி, மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.

விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சினேகன், இயக்குநர் ராஜூமுருகன், மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதுகின்றனர். சுகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

மேலும் இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE