சென்னை: தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித்குமாரின் ‘வேர்ல்ட் டூர்’ இரண்டாம் கட்டம் வரும் நவம்பர் மாதம் தொடங்கும் என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா அறிவித்துள்ளார். இது குறித்த தகவலை சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
“சவாலான நிலப்பரப்பில், தீவிர வானிலை சூழலை எதிர்கொண்டு இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், பூட்டான் மற்றும் நேபாளத்தில் தனது வேர்ல்ட் டூர் பயணத்தின் முதல் கட்டத்தை அஜித் குமார் நிறைவு செய்துள்ளார். இந்த உலக சுற்றுப் பயணத்தின் அடுத்த கட்டம் வரும் நவம்பரில் தொடங்கும்” என சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
இந்த 6 மாத கால நேரத்தில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் அஜித்குமார் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.