வெளியான 2 நாளில் ரூ.100 கோடி வசூலித்த பொன்னியின் செல்வன் 2!

By செய்திப்பிரிவு

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் 2 பாகங்களாகத் திரைப்படமாக்கி இருக்கிறார். முதல் பாகம் கடந்த ஆண்டு செப்.30ம் தேதி வெளியாகி வெற்றி பெற்றது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் 2-ம் பாகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. தமிழகத்தில் மட்டும் சுமார் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் இந்தப் படம் திரையிடப்பட்டது. இந்நிலையில் லைகா தயாரித்துள்ள இந்தப் படம் உலகம் முழுவதும் 2 நாளில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து ஆச்சரியப்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE