பிரபல கன்னட நடிகர் சுதீப். இவர் தமிழில், ‘நான் ஈ’, ‘புலி’, ‘முடிஞ்சா இவன புடி’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ‘விக்ராந்த் ரோணா’, பான் இந்தியா முறையில் தமிழிலும் வெளியானது. அவர் அடுத்து 3 படங்களில் நடிக்க இருப்பதாகத் தெரிவித்திருந்தார். அதில் 2 படங்களை இயக்குநர்கள் சேரன் மற்றும் கே.எஸ்.ரவிகுமார் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு கர்நாடக தேர்தலுக்குப் பிறகு வெளியாகும் என்று தெரிகிறது. சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ படத்தை கன்னடத்தில், ‘மை ஆட்டோகிராப்’ என்ற பெயரில், சுதீப் இயக்கி நடித்திருந்தார்.