கிச்சா சுதீப்பை இயக்குகிறார் சேரன்!

By செய்திப்பிரிவு

பிரபல கன்னட நடிகர் சுதீப். இவர் தமிழில், ‘நான் ஈ’, ‘புலி’, ‘முடிஞ்சா இவன புடி’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ‘விக்ராந்த் ரோணா’, பான் இந்தியா முறையில் தமிழிலும் வெளியானது. அவர் அடுத்து 3 படங்களில் நடிக்க இருப்பதாகத் தெரிவித்திருந்தார். அதில் 2 படங்களை இயக்குநர்கள் சேரன் மற்றும் கே.எஸ்.ரவிகுமார் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு கர்நாடக தேர்தலுக்குப் பிறகு வெளியாகும் என்று தெரிகிறது. சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ படத்தை கன்னடத்தில், ‘மை ஆட்டோகிராப்’ என்ற பெயரில், சுதீப் இயக்கி நடித்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE