மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் ஜெயராம். தமிழிலும் பல படங்களில் நடித்துள்ள அவர், ‘பொன்னியின் செல்வன்’-ல் நடித்த ஆழ்வார்க்கடியான் கேரக்டர் பேசப்பட்டது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி வெளியாகிறது. இதற்கிடையே நடிகர் ஜெயராம், தன் மனைவி பார்வதியுடன் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.