கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் இலியானா. விஜய்யின் 'நண்பன்' படத்தில் நடித்த அவர், தெலுங்கில் தொடர்ந்து நடித்து வந்தார். இப்போது இந்தியில் நடித்து வருகிறார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் ஆஸ்திரேலிய புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரூ என்பவரை காதலித்து வந்தார். 2019ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.
பின்னர் நடிகை கேத்ரினா கைஃப்பின் சகோதரர் செபாஸ்டியன் லாரன்ட் மைக்கேலை அவர் காதலிப்பதாகச் செய்திகள் வெளியாயின.
இந்நிலையில் தனது, முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக இலியானா தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். குழந்தையின் சட்டை மற்றும் மாமா என்ற டாலர் புகைப்படங்களைப் பகிர்ந்து ‘என் சிறிய அன்பே, இனியும் உன்னை சந்திக்கக் காத்திருக்க முடியாது’ என பதிவிட்டுள்ளார். இதை உறுதிப்படுத்தும் விதமாக இலியானாவின் தாய் சமீரா, ‘எனது பேரக் குழந்தையை விரைவில் உலகிற்கு வரவேற்கிறோம்’ என பதிவிட்டுள்ளார். அதில் தனது கணவர் யார் என்பதை இலியானா வெளிப்படுத்தவில்லை. ரசிகர்களும் திரையுலகினரும் இலியானாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.