தமிழ்த்திரைக்கூடம் தயாரித்துள்ள இப்படம், 'அரணம்'. மஸ்காரா போட்டு மயக்குறியே, மக்காயலா மக்காயலா, வேலா வேலா வேலாயுதம், உசுமுலாரசே உசுமுலரசே உட்பட பல பாடல்களை எழுதிய பிரியன் இந்த படத்தை இயக்கி கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
கதாநாயகியாக வர்ஷா நடித்துள்ளார். லகுபரன் , கீர்த்தனா உட்பட பலர் நடித்துள்ளனர். நித்தின் கே ராஜ், நௌசத் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சாஜன் மாதவ் இசை அமைத்துள்ளார். படம் பற்றி பிரியன் கூறும்போது, "வாழ்க்கையின் அதிசயமே அடுத்த நிமிடம் நடக்கும் எதிர்பாரா ஆச்சர்யங்களும், அதிர்ச்சிகளும்தான். அப்படி ஒரு மனிதன் வாழ்வில் நடக்கும் சில சம்பவங்கள் அதை எதிர்கொள்கையில் அவன் காணும் நிகழ்வுகள் என கதை செல்லும். திரைக்கதை வித்தியாசமாக இருக்கும்" என்றார்.