3 நாட்களில் ரூ.20 கோடி வசூலை எட்டிய சிம்புவின் ‘பத்து தல’

By செய்திப்பிரிவு

நடிகர் சிம்புவின் ‘பத்து தல’ திரைப்படம் மூன்று நாட்களில் ரூ.20 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ஒபிலி.என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் மார்ச் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘பத்து தல’. கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், கௌதம் வாசுதேவ் மேனன், ரெடின் கிங்க்ஸ்லி, சென்றாயன், அனு சிதாரா, டீஜே உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் பட்ஜெட் ரூ.40 கோடி. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் முதல் நாள் ரூ.12.3 கோடி வரை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் மூன்று நாள் முடிவில் ‘பத்து தல’ திரைப்படம் ரூ.20 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE