எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘ஆர்ஆர்ஆர்’. ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் இணைந்து நடித்திருந்த இந்தப் படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் குவித்தது.
இதில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது. இந்த விருதை வென்ற முதல் இந்திய மற்றும் ஆசியப் பாடலாக இது அமைந்தது. இப்போது ஆஸ்கர் விருதின் இறுதிப் பட்டியலிலும் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் ராம்சரண், ஹாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி வந்தன. இப்போது அதை ராம் சரண் உறுதிப்படுத்தியுள்ளார். ஹாலிவுட்டின் சில புகழ்பெற்ற இயக்குநர்களுடன் பேசி வருவதாகவும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.