“நான் சிம்புவின் பக்தன்; ஹெலிகாப்டரில் புரோமோஷன் பண்ணுவேன்” - ‘பத்து தல’ குறித்து கூல் சுரேஷ்

By செய்திப்பிரிவு

“நான் சிம்புவின் பக்தன்; இந்தப் படத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து பூ தூவி புரோமோஷன் செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளேன்” என்று நடிகர் கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், கெளதம் மேனன், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் 'பத்து தல' திரைப்படம் மார்ச் 30-ம் தேதி திரைக்கு வருகிறது. இதன் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் முதல் பாடலும் டீசரும் திரையிடப்பட்டது.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கூல் சுரேஷ் , “என்னிடம் ஏன் மற்ற நடிகர்களின் படங்களுக்கு புரோமோஷனுக்கு வருவதில்லை எனக் கேட்டனர். நான் சிம்புவின் தீவிர பக்தன். அவரை நான் வெறும் நடிகராக மட்டும் பார்க்கவில்லை. அவர்தான் எனக்கு எல்லாம். சிம்பு வருடத்திற்கு ஒரு படம் நடித்தாலுமே அது ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் தான். ஒவ்வொரு படத்திற்கு புரோஷனை வித்தியாசமாக செய்வேன்.

இந்தப் படத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து பூ தூவி புரோமோஷன் செய்ய வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன். அதற்கான அனுமதி வாங்கும் வேலைகள் நடந்து வருகிறது. என் வீட்டை விற்றாவது இதை செய்ய திட்டமிட்டுள்ளேன். சிம்புவை கீழேயிருந்து பார்ப்பதைத் தாண்டி மேலிருந்து பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். கண்டிப்பாக ஹெலிகாப்டரில் வருவேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE