“டாடா படத்தைப் பார்த்து நெகிழ்ந்தேன்” - ராகவா லாரன்ஸ்

By செய்திப்பிரிவு

“டாடா படத்தைப் பார்த்து நெகிழ்ந்துபோனேன்” என நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் படக்குழுவை அவர் பாராட்டியுள்ளார்.

அறிமுக இயக்குநர் கணேஷ்.கே.பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘டாடா’. ஜென் மார்டின் இசையமைத்திருந்த இப்படத்தை அம்பேத்குமார் தயாரித்திருந்தார். விடிவிகணேஷ், பாக்யராஜ், ஐஸ்வர்யா, ஹரீஸ்.கே உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தை ரெட்ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டிருந்தது. அப்பா - மகன் பாசத்துடன் எமோஷனலாக உருவான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தைப் பார்த்து நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “டாடா படத்தைப்பார்த்து நெகிழ்ந்து போனேன். திரையரங்குகளில் அனைவரும் சென்று பார்க்கக்கூடிய சிறந்த குடும்ப திரைப்படம். படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE