மாதவனுடன் கைகோக்கும் இயக்குநர் மித்ரன் ஜவஹர்

By செய்திப்பிரிவு

‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் மித்ரன் ஜவஹர், நடிகர் மாதவனுடன் கைகோத்துள்ளார்.

தனுஷ், நித்யா மேனன் நடிப்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘திருச்சிற்றம்பலம்’. அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ப்ரியாபவானி ஷங்கர், ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் பெரிய அளவில் விளம்பரம் இல்லாமல் வெளியான இப்படம் ஒட்டுமொத்தமாக ரூ.110 கோடியை வசூலித்தது. விமர்சன ரீதியாகவும் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் மித்ரன் ஜவஹர் அடுத்ததாக நடிகர் மாதவனுடன் கைக்கோக்கிறார். இந்தப் படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE