4 நாளில் ரூ.400 கோடி - வசூல் சாதனையில் ‘பதான்’

By செய்திப்பிரிவு

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடித்து கடந்த 25-ம் தேதி வெளியான இந்திப் படம், ‘பதான்’. சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ‘பேஷரம் ரங்’ பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருந்த காவி பிகினி, சர்ச்சையை ஏற்படுத்தியது.

படத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த எதிர்ப்புகளை மீறி ‘பதான்’ வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. 4 வருடத்துக்குப் பிறகு ஷாருக்கான் நடித்த படம் என்பதால், ரசிகர்கள் தியேட்டரில் குவிந்து வருகின்றனர்.

முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.106 கோடி வசூல் அள்ளிய இந்தப்படம் அடுத்தடுத்த நாட்களிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 4 நாட்களில் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது.

இதன்மூலம் அதிவேகமாக ரூ.400 கோடி வசூலித்த இந்திப் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் நிலைகுலைந்து வரும் பாலிவுட் திரையுலகிற்கு ‘பதான்’ வசூல், நம்பிக்கையை அளித்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE