‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் அடுத்த படத்தில் இந்தி நடிகர் ஆமீர்கான் நடிக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் நடிக்கும் ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார், ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரசாந்த் நீல். இந்தப் படத்தை அடுத்து ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. ஜூனியர் என்.டி.ஆரின் 31 வது படமான இது பற்றிய அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது.
இதில் முக்கிய கேரக்டர் ஒன்றில் கமல்ஹாசனை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. ஆனால், ‘விக்ரம்’ பட வெற்றிக்குப் பிறகு அதை மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த கேரக்டரில் இந்தி நடிகர் ஆமீர்கான் நடிக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.