‘கேஜிஎஃப் 2’ வசூலை ‘சலார்’ முறியடிக்கும்: தயாரிப்பாளர் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

யாஷ் நடித்த ‘கேஜிஎஃப் 2’ படம் வசூல் சாதனை படைத்துள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் ரூ.1,200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இப்படத்தை தயாரித்த ஹோம்பாளே நிறுவனம் அடுத்து ‘காந்தாரா’ படத்தை தயாரித்தது. அதுவும் கன்னடம், தமிழ், இந்தி, தெலுங்கு என வசூலில் சாதித்தது. இந்த நிறுவனம் இப்போது பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தை தயாரித்து வருகிறது. இதில் ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் பற்றி தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் கூறும்போது, “இந்தப் படத்தின் 80% படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. ஜனவரிக்குள் மற்ற படப்பிடிப்பையும் முடித்துவிடுவோம். விஎஃப்எக்ஸ் பணிகளுக்கு மட்டும் 6 மாதங்கள் தேவைப்படுகிறது. செப்.28-ல் படத்தைவெளியிட திட்டம் வைத்துள்ளோம்.இதுவரை நாங்கள் தயாரித்த படங்களின் வசூல் சாதனையை ‘சலார்’ முறியடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE