ஆஸ்கர் விருது பரிந்துரைக்கு அனுப்பப்பட்ட ‘காந்தாரா’

By செய்திப்பிரிவு

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா’ திரைப்படம் கன்னடத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியிடப்பட்டது. ரூ.16 கோடியில் உருவாக்கப்பட்ட இப்படம் உலகம் முழுக்க ரூ.400 கோடி வரை வசூலித்தது.

இதனிடையே, காந்தாரா திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டுக்கான விருது பரிந்துரைக்கு திரைப்படம் அனுப்பப்பட்டுள்ளது என்று படத்தை தயாரித்த ஹோம்பேல் புரொடக்ஷன்ஸ் நிறுவனர் விஜய் கிர்கந்தூர் இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில் உறுதிபடுத்தியுள்ளார். கடைசி நேரத்தில் விண்ணப்பத்தை அனுப்பியிருந்தாலும் குழு நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படமும் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE